நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில் மாணவர் மன்றத் தேர்தல் நடைபெற்றது.
நாமக்கல், நேஷனல் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் 2025–26 ஆம் ஆண்டிற்கான மாணவர் மன்றத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் பள்ளி தலைமை மாணவன், தலைமை மாணவி, மற்றும் இளைய தலைமை மாணவன், இளைய தலைமை மாணவி என 4 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
தேர்தலில் சுமார் 14 மாணவ மாணவிகள் போட்டியிட்டனர். தேர்தல் நடைபெற்று, வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளி சேர்மன் சரவணன், பள்ளி முதல்வர், மேல்நிலை வகுப்பு முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.




