Close
மார்ச் 7, 2026 2:33 மணி

அடிப்படை எழுத்தறிவு வழங்க நாமக்கல் மாவட்டம் முழுவதும் 759 மையங்கள் துவக்கம்

நாமக்கல் மாவட்டத்தில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் மூலம், 2 ஆம் கட்டமாக, 9,114 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்குவதற்காக, 759 மையங்கள் துவங்கப்பட்டுள்ளன.

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் மூலம், 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப்படிக்க தெரியாதவர்களுக்கு, அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு கல்வி, 2022-23 முதல் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 59,362 படிக்காதவர்கள் பயனடைந்துள்ளனர்.

இந்த கல்வியாண்டில், முதற்கட்டமாக, 12,889 கற்போர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, மதிப்பீட்டு தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 2ஆம் கட்டமாக, மாவட்டம் முழுவதும், 759 மையங்கள் மையங்கள் துவங்கப்பட்டுள்ளது.

அதற்காக, அனைத்து குடியிருப்புகளிலும் படிக்காதவர்கள் கணக்கெடுப்பு பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு, கண்டறியப்பட்டவர்கள் அனைவரையும் கற்போர் மையங்களில் சேர்த்து பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், நாமக்கல் மாவட்டத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதையடுத்து, மாவட்டத்தில் இதுவரை 9,114 பேர் படிப்பறிவு இல்லாதவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.

பள்ளிபாளையம் வட்டார வளமையத்தில் உள்ள பல்லக்காப்பாளையம் ஊராட்சி, தொடக்கப்பள்ளியில், கற்போர் மையம் தொடங்கப்பட்டது. நாமக்கல் சிஇஓ மகேஸ்வரி, குத்துவிளக்கேற்றி மையத்தை துவக்கி வைத்து, எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வியுடன், தொழிற்கல்வியும் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தினார்.

உதவித் திட்ட அலுவலர் அருள்தாஸ், வட்டார கல்வி அலுவலர் அருள்காமாட்சி, சிந்துஜா, மேற்பார்வையாளர் சரவணன், ஆசிரியர் பயிற்றுனர்கள் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top