நாசாவின் விண்வெளி குடியேற்ற வடிவமைப்பு போட்டியில் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி மாணவர்கள் தொடர்ச்சியாக 13 ஆண்டுகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
2025ஆம் ஆண்டுக்கான நாசா விண்வெளி குடியேற்ற வடிவமைப்பு போட்டி, NSS விண்வெளி தீர்வுப் போட்டி என்றும் அழைக்கப்படுகிறது, இது விண்வெளி குடியிருப்புகளுக்கான கருத்துக்களை மாணவர்கள் வடிவமைத்து முன்மொழியும் வருடாந்திர போட்டியாகும்
இந்தப் போட்டியை தேசிய விண்வெளி சங்கம் (NSS) ஏற்பாடு செய்துள்ளது . 2025ம் ஆண்டில், இந்தப் போட்டியில் 25 நாடுகளைச் சேர்ந்த 4,900 க்கும் மேற்பட்ட உள்ளீடுகளுடன் 26,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இந்தப் போட்டி, விண்வெளியில் வாழ்வதிலும் வேலை செய்வதிலும் உள்ள சவால்கள் மற்றும் சாத்தியக்கூறுகள் பற்றி சிந்திக்க மாணவர்களை ஊக்குவிக்கிறது.
உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் சுமார் 30 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 475 மாணவர்கள் ஐ.எஸ்.டி.சி மாநாட்டில் கலந்து கொண்டனர். அவர்களில் 67 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
திருவண்ணாமலை ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் முதலிடமும், மண்டல அளவில் இரண்டாம் இடமும் பிடித்து சாதனை படைத்தனர்.
பள்ளி முதல்வர் அமலி பிரசில்லா அவர்களும், கல்வித்துறை தலைவர் பாபு மாதேஷ் அவர்களும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்
இந்த போட்டியில், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களைச் சேர்ந்த வேறு எந்தப் பள்ளி / கல்வி நிறுவனத்திலிருந்தும் ஒரு மாணவர் கூட ஐ.எஸ்.டி.சி.யில் பங்கேற்கவில்லை.




