நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 602 மனுக்களை பொதுமக்கள் அளித்னர். அவற்ற பரிசீலித்த ஆட்சியர், உரிய அதிகாரிகளிடம் வழங்கி, மனுக்களின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து, நாமக்கல் வட்டம், பேட்டைகாலனி தெருவில் கடந்த 9ம் தேதி 3 வீடுகள் தீ பிடித்து எரிந்ததில் வீட்டில் இருந்த அடையாள ஆவணங்கள் எரிந்து சாம்பலானது. இதையொட்டி, 3 ரேஷன் கார்டுகள் மற்றும் பட்டா நகல்களை ஆட்சியர் வழங்கினார்.
மேலும், தாட்கோ சார்பில்19 பயனாளிகளுக்கு ரூ. 1,67,30,549 திட்ட மதிப்பில் ஏசி, ஃபிரிட்ஜ் விற்பனை மற்றும் சர்வீஸ், பயணியர் வாகனம், போர்வெல்,செண்டரிங், கார்மெண்ட்ஸ், சுமை வாகனம், போட்டோ ஸ்டுடியோ, சாமியானா பந்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு ரூ. 52,93,913 மானியத்தொகை உள்ளிட்ட, மொத்தம் 21 நபர்களுக்கு ரூ. 52.93 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்
கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் பிரபாகரன், தாட்கோ மேலாளர் ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




