Close
ஏப்ரல் 24, 2026 1:14 காலை

மாவட்ட நீதிபதி தலைமையில் சமரச நீதிமன்றம் குறித்த விழிப்புணர்வு பேரணி

சமரச நீதிமன்றம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி ப.உ. செம்மல் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

பல்வேறு நீதிமன்றங்களை பல்லாயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருப்பதை உணர்ந்த உச்சநீதிமன்றம் இரு தரப்புகள் இடையே சமரசம் அது நம் வசம் எனும் வாசகத்தை முன்னிறுத்தி சமரச தீர்வு காண நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தியது. மேலும் அது குறித்த விழிப்புணர்வு பொதுமக்கள் இடையே ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளையும் நடத்த அறிவுறுத்தியது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி ப.உ. செம்மல் தலைமையில் இன்று விழிப்புணர்வு பேரணி நீதிமன்ற வளாகத்தில் துவங்கி நடைபெற்றது. பேரணியின்போது பொதுமக்களுக்கு நீதிபதி செம்மல், எஸ் பி சண்முகம், சார் ஆட்சியர் ஆஷிக் அலி உள்ளிட்டோர் துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் மாவட்ட நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள், தேசிய மாணவர் படை , நாட்டு நல பணி திட்ட மாணவர்கள் நீதிமன்ற ஊழியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய நீதிபதி ப.உ. செம்மல் , சமரச நீதிமன்றத்தில் மூலம் தீர்க்கப்படும் வழக்குகளில் இரண்டு தரப்பினருக்குமே வெற்றி என்பது உறுதியாகிறது. ஆகையால் இதனை பொதுமக்கள் உணர்ந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top