Close
ஏப்ரல் 23, 2026 9:53 மணி

செம்மினிபட்டியில் ஆதீஸ்வரர் திருக்கோயில் ஆடி திருவிழா அன்னதானம்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே செம்மினிபட்டியில் இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை அடிவாரத்தில் பழமையும் பெருமையும் வாய்ந்த பாண்டிய மன்னர்களால் வழிபாடு செய்து சிறப்புடைய ராகு கேது நிவர்த்தி ஸ்தலம் ஆதி வடிவுடையாள் சமேதஆதி ஈஸ்வரர் திருக்கோயிலில் மகா நாக பஞ்சமி கருட பஞ்சமி ஆடி திருவிழா அன்னதானம் நடந்தது.

இந்த திருவிழாவை முன்னிட்டு, காலை 6 மணிக்கு கணபதி ஹோமம் செய்து கிடா வெட்டி வழிபாடு செய்து சிறுமலை எல்லை காவல் தெய்வங்கள் அக்னி கருப்புசாமி ஜடா முனீஸ்வரர் வராகி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனைகள் செய்யப்பட்டது.

மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதன் ஏற்பாடுகளை, கோவில் பூசாரி ஆதி கொற்றவை அறக்கட்டளை நிர்வாக தலைவர் ஆதி முத்துக்குமார் தலைமையில் திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top