Close
மார்ச் 7, 2026 4:40 மணி

வியாபாரிகள் வேலை நிறுத்தம்: நெல் மூட்டைகள் தேக்கம்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள்

தமிழகத்தில் உள்ள மார்க்கெட் கமிட்டிகளில் மின்னணு தேசிய வேளாண் சந்தை இனாம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளின் விலை பொருட்கள் ஏலம் விடப்பட்டு விவசாயிகள் வங்கி கணக்குக்கு மூலம் பணம் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.

போளூா்

போளூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளின் நெல் மூட்டைகளை வியாபாரிகள் வாங்குவதற்கு வராததால் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. கிடங்கு மற்றும் வெளியில் விவசாயிகள் அறுவடை செய்து கொண்டு வந்த நெல் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கண்காணிப்பாளா் தினேஷ் கூறும்போது, ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்கில் நெல் மூட்டைகள் நிரம்பியுள்ளன. எனவே, வெட்டவெளியில் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்கும்படி கூறி வருகிறோம்.

இருந்தும், விவசாயிகள் வெளியில் நெல் மூட்டைகளை இறக்கிவைத்துள்ளனா் என்றாா். பருவமழை தொடங்கியுள்ளதால் நெல் மூட்டைகள் மழைநீரில் நனையும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் இந்த நெல் மூட்டைகளை எடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில்  சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகளின் விலை பொருட்களை வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொள்ளாததால் மறு அறிவிப்பு வரும் வரைநெல் மூட்டைகளை கொண்டு வர வேண்டாம் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தி அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top