நாமக்கல், நேஷனல் பப்ளிக் பள்ளியில் வல்வில் ஓரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியின் சிறப்பை எடுத்துக்கூறும் வகையில், நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில், வல்வில் ஓரி விழா நடைபெற்றது.
பள்ளி சேர்மன் சரவணன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். விழாவில் வல்வில் ஓரியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சு, கிராமிய நடனம், கோலாட்டம், கும்மியாட்டம், நாடகம், நாட்டுப்புற பாடல், முளைப்பாரி பாடல், சிலம்பம் சுற்றுதல் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
9 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் கொல்லிமலையில் விளையும் தானியங்கள், பழங்கள், மலர்கள், அரிய மூலிகைகள் போன்றவற்றைக் கொண்டு கண்காட்சி அமைத்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
விழாவில் வல்வில் ஓரியின் சிறப்புகள் குறித்து வீடியோ காட்சி காண்பிக்கப்பட்டது. முடிவில் பள்ளி முதல்வர் நன்றி கூறினார்.




