திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, தாட்கோ சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி ஆறுச்சாமி தலைமை வகித்தாா்.
சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ், செங்கம் எம்எல்ஏ கிரி, திருவண்ணாமலை மாநகராட்சி மேயா் நிா்மலா வேல்மாறன், தூய்மைப் பணியாளா் நல வாரிய உறுப்பினா் அரிஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைகள் குறித்து நல வாரியத் தலைவா் அவா்களுடன் கலந்துரையாடினாா்.
இதைத் தொடா்ந்து தூய்மைப் பணியாளா்களுக்கு கருச்சிதைவுக்கான உதவித்தொகை ரூ.3 ஆயிரமும், கல்வி உதவித்தொகையாக 3 பயனாளிகளுக்கு தலா ரூ.1500,மைக்ரோ கிரெடிட் தொகையாக 20 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ. 10 லட்சத்து 7 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், 10 பயனாளிகளுக்கு ஸ்மாா்ட் காா்டும் வழங்கப்பட்டன.
மேலும், மாநகராட்சி மூலம் 40 பயனாளிகளுக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பிலான சீருடைகள், 30 பயனாளிகளுக்கு ரூ.ஒரு லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், 7 பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீடு அட்டையும் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரிய தலைவர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் கள ஆய்வு மேற்கொண்டு தூய்மைப்பணியாளர்களின் கோரிக்கைகளை அறிந்து திட்ட அறிக்கையாக வழங்க ஆணையிட்டுள்ளார்.
அதன்படி இதுவரை 23 மாவட்டத்திற்கு சென்று தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் என்னவென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறேன் . திருவண்ணாமலை 24-வது மாவட்டமாக வந்துள்ளேன்.
இந்நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வழங்கி உள்ளனர். அதனை பரிசீலினை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்,
தூய்மை பணியாளர்களுக்கு இதுவரை ரூ.5 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள உதவிகளை இந்த நலவாரிய உறுப்பினர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் குழந்தை தொழிலாளர்கள் படிப்பதற்கு 1 5 இலட்சத்திலிருந்து 30 இலட்சமாக உயர்த்தி வழங்க நாங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அக்கோரிக்கையினை ஏற்று நல்ல வாய்ப்பினை தருவர்கள்.
அதேபோல் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் விபத்து மரணம் ரூ.5 லட்சமாக உள்ளதை ரூ.8 இலட்சமாக உயர்த்த கடந்த மாதம் நடைபெற்ற வாரிய குழு கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஆகவே எல்லா நிலைகளிலும் தூய்மைப்பணியாளர்களை பாதுகாப்போம், எல்லா நிலைகளிலும் இந்த தூய்மைப் பணியாளர்களை பேணி பாதுகாப்போம் என்ற அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை விரைந்து செயல்படுத்தி வருகிறார் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், திட்ட இயக்குநா் மரு.மணி, தாட்கோ மாவட்ட மேலாளா் பியா்லின் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.




