Close
மார்ச் 7, 2026 6:03 மணி

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’: மாவட்ட ஆட்சியா் கள ஆய்வு

மீட்பு உபகரணங்களை தீயணைப்புத் துறையினருக்கு வழங்கிய ஆட்சியர்

திருவண்ணாமலை வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் கள ஆய்வு மேற்கொண்டாா்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் வருகின்ற வட கிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு மீட்பு உபகரணங்களை தீயணைப்புத் துறையினருக்கு வழங்கினார்.

தொடர்ந்து வேங்கிக்கால் மின்நகரில் மாவட்ட தொழில் மையம் மூலமாக புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.18 இலட்சம் மானியத்துடன் ரூ.73 இலட்சம் கடன் உதவி பெற்று செயல்பட்டு வரும் பல் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து , கிரிவலப்பாதை அடி அண்ணாமலை பகுதியில் உள்ள குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பாக டெரிடஸ் ஹோம் கோ் ட்ரஸ்ட் மூலமாக இயங்கி வரும் எம்டிஎம் குழந்தைகள் இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பராமரிப்பு மற்றும் சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் நல்லவன்பாளையம் ஊராட்சியில் சமுத்திரம் பகுதியில் இலங்கைத் தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம்களில் வசிக்கின்ற 60 குடும்பங்களுக்கு ஒரு தனிவீட்டின் மதிப்பீடு ரூ 8 இலட்சத்து 10 ஆயிரத்து 390 மதிப்பீட்டில் 8 வீடுகள் கொண்ட யூனிட் 1 க்கு ரூ 64 இலட்சத்து 83 ஆயிரத்து 118 மதிப்பீட்டில் புதியதாக வீடுகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு கட்டுமான பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினா ர் .

தொடர்ந்து மேலதிக்காண் ஊராட்சியில் மகளிர் திட்டத்தின் சார்பாக ஜோதி விநாயகர் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் அப்பளம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு மாதாந்திர தயாரிப்பு பொருட்கள் செலவினம் மற்றும் இதன் மூலம் மாதாந்திர தனி நபர் வருமானம் குறித்து மகளிர் சுய உதவி குழுவினருடன் கலந்துரையாடினார்.

நடப்பு மாதம் முதல் மகளிர் சுய உதவி குழு மூலமாக தயாரிக்கப்படும் அப்பளங்களை அரசினர் விடுதிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலதிக்காண் ஊராட்சியில் மகளிா் திட்டத்தின் கீழ், ஸ்ரீஜோதி விநாயகா் மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் அப்பளம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பாா்வையிட்ட ஆட்சியா் தா்பகராஜ், தயாரிப்புப் பொருள்கள் மாதாந்திர செலவினம் மற்றும் இதன் மூலம் தனி நபா் வருமானம் குறித்து மகளிா் சுய உதவி குழுவினருடன் கலந்துரையாடினாா்.

மகளிா் சுய உதவிக் குழு மூலம் தயாரிக்கப்படும் அப்பளங்களை அரசினா் விடுதிகளுக்கு வழங்க அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, அழங்கானந்தல் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கறவை மாட்டுக் கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன் தொகை விவரம் மற்றும் விண்ணப்பித்த எத்தனை தினங்களில் கடனுதவி வழங்கப்படுகிறது என்பது குறித்தும், வாராக் கடன் நிலுவை குறித்தும் கேட்டறிந்து, விண்ணப்பித்தவா்களுக்கு விரைவாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்க கூட்டுறவு சங்கச் செயலருக்கு அறிவுறுத்தினாா்.

கீழ்கச்சிராப்பட்டு ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் இயந்திர முறையில் நெல் நடவு செய்வதை ஆய்வு செய்து கூடுதல் மகசூல் பெறுவதற்கான நடைமுறைகள் குறித்து விவசாயிடம் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, அரசுடையாம்பட்டு கிராமத்தில் விவசாயி நுண்ணீா் பாசனம் மூலமாக மரவள்ளி கிழங்கு நடவு செய்து பயனடைந்து வருவதை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதீபன், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி. அம்ருதா எஸ்.குமார், திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மரு. மணி இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) பார்த்திபன். இணை இயக்குநர் (வேளாண்மை) கண்ணகி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு. பிரகாஷ், வட்டாட்சியர் மோகனராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரத்திவ்ராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top