Close
மார்ச் 7, 2026 6:03 மணி

மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு‌: பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து

நாட்டின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு‌ போடப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி 78 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. மத்திய உளவுத் துறை உத்தரவின்படி, மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தமிழக போலீஸார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதி நவீன வெடிகுண்டு கண்டுபிடிப்பு சாதனம் (EVD) மற்றும் மோப்ப நாய்கள் மூலம் தீவிர கண்காணிப்பு பணியில் உள்ளனர்.

மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களை சோதனையிட்ட பின்னரே அனுமதிக்கின்றனர். மேலும், பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

பாதுகாப்புப் படை வீரர்கள் விமான நிலையத்தைச் சுற்றிலும் இரவு, பகலாக வாகனங்களில் ரோந்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை முதல் விமான நிலையத்துக்குள் செல்ல பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பையொட்டி, அதிவிரைவு அதிரடிப் படை வீரர்கள் விமான நிலைய உள்வாளகம், வெளிவளாகம், மற்றும் தமிழக போலீஸார் 24 பேர் அடங்கிய குழுவினர் விமான நிலைய வெளிவாளாகம், சோதனைச்சாவடி மற்றும் சுற்று பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top