Close
மார்ச் 7, 2026 4:40 மணி

நாமக்கல்லில் மாவட்ட அளவில் சிலம்பம் தனித்திறமை போட்டி: 500 வீரர்கள் பங்கேற்பு

நாமக்கல் அருகே, வேட்டாம்பாடியில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு, ஓய்வுபெற்ற டிஇஓ உதயகுமார் சான்றிதழ்களை வழங்கினார்.

நாமக்கல்லில் நடந்த, மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில், 500க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

நாமக்கல் மாவட்ட சிலம்பம் மூத்த ஆசான் நலச்சங்கம் சார்பில் 79வது சுதந்திர தினத்தையொட்டி, மாவட்ட அளவிலான சிலம்பம் தனித்திறமை போட்டி, வேட்டாம்பாடியில் நடைபெற்றது.

அதில், நாமக்கல், ப.வேலூர், ராசிபுரம், திருச்செங்கோடு, மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டிகள், 6 முதல் 17 வயது வரை, 11 பிரிவின் கீழ் தனித்திறமை போட்டியாக நடத்தப்பட்டது. வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்று, தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.

ஓய்வுபெற்ற டிஇஓ உதயக்குமார் போட்டிகளை துவக்கி வைத்து, வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை, நாமக்கல் மாவட்ட சிலம்பம் மூத்த ஆசான்கள் நலச் சங்கத்தினர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top