Close
மார்ச் 7, 2026 6:04 மணி

கூட்டுறவுத்துறை பணியாளர் தேர்வுக்கு 20ம் தேதி இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்

நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி

கூட்டுறவுத்துறை பணியாளர் தேர்வுக்கு, நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் 20ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்பு துவங்குகிறது. இது குறித்து, நாமக்கல் ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.

கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்பட உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள உதவியாளர், எழுத்தர் பணியிடங்களுக்கான தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, வரும் 20ம் தேதி மாலை 4 மணிக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் சிறப்பு வல்லுநர்களைக் கொண்டு துவங்க உள்ளது.

பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை 04286-222260 என்ற தொலைபேசி மூலமோ, அல்லது onlineclassnkl@gmail.com  என்ற இமெயில் மூலமோ அல்லது மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தை நேரில் தொடர்புகொண்டோ முன்பதிவு செய்துகொண்டு கலந்துகொள்ளலாம்.

இவ்வகுப்பில் கலந்து கொள்ள வரும் மனுதாரர்கள் 2 பாஸ்போர்ட் அளவு போட்டோ மற்றும் ஆதார் கார்டு நகல் கொண்டுவரவேண்டும் என தெரிவித்துள்ளார்

நாமக்கல் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்ற மாணவர்கள், 2024-2025 ஆம் ஆண்டு வெளியான தேர்வு முடிவுகளில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 12 பேரும், சீருடைப்பணியாளர் தேர்வில் 13 பேரும், டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வில் 11 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top