Close
ஏப்ரல் 24, 2026 12:49 காலை

நீதியைத் தேடி சங்கத்தின் இலவச சட்ட உதவி பயிற்சி முகாம்

மதுரை செல்லூர் அருகே மனோகரா நடுநிலைப் பள்ளியில், நீதியைத் தேடி சங்கம் சார்பில் இலவச சட்ட பயிற்சி முகாம் பள்ளி தாளாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் மாநிலப் பொருளாளர் ஜோஸ்பின் சுகந்தி அனைவரையும் வரவேற்றார். இதில் மாநில பொதுச் செயலாளர் தேவமூர்த்தி கலந்து கொண்டு, பொய் வழக்குகளை கையாள்வது எப்படி? அரசு வழங்கும் இலவச சேவைகளை லஞ்சம் இல்லாமல் பெறுவது எப்படி? காவல் நிலையத்தில் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வைப்பது எப்படி? என்பது குறித்த இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தினார்.

மேலும், மாநில இணைச்செயலாளர் நாச்சான் பங்கேற்று, வருவாய் துறையினரை வேலை வாங்குவது எப்படி? தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு மாற்று சட்டம் என்ன என்பதைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

முகாமில், நீதியைத் தேடி சட்ட விழிப்புணர்வு சங்கம் உறுப்பினர்கள் நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில், நிர்வாகி லலிதா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top