சேந்தமங்கலம் மற்றும் புதன்சந்தை பகுதியில் 22ம் தேதி, வெள்ளிக்கிழமை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், 22ம் தேதி வெள்ளிக்கிழமை மின்சார விநியோகம் தடை செய்யப்படும். இதனால் சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனாணூர், பேமாவூர், கொண்டமநாய்க்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துக்காப்பட்டி, புதுக்கோம்பை, பளையபாளையம், சிவநாய்க்கன்பட்டி, லக்கமநாய்க்கன்பட்டி, சாலப்பாளையம், சிவியாம்பாளையம் மற்றும் சேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் 22ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 22ம் தேதி மின்சார விநியோகம் தடை செய்யப்படும். இதனால் செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை, கொளத்துப்பாளையம், ஏளூர், தத்தாதிரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம், கொளிஞ்சிப்பட்டி, புதுச்சத்திரம், பாச்சல், பிடாரிப்பட்டி, மூணுசாவடி, ஏ.பு.பாளையம், களங்காணி, காரைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் 22ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார சப்ளை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




