Close
மார்ச் 7, 2026 9:01 மணி

பெண்கள் தலைமையின் கீழ் தெற்கு-மத்திய ரயில்வேயில் ஐந்து முக்கிய துறைகள்: புதிய சாதனை

தெற்கு மத்திய ரயில்வே வரலாற்றில் முதல்முறையாக, அதன் மிக முக்கியமான ஐந்து துறைகளான செயல்பாடுகள், வணிகம், நிதி, பாதுகாப்பு மற்றும் மருத்துவம் ஆகியவை தற்போது பெண் அதிகாரிகளால் வழிநடத்தப்படுகின்றன.

கடினமான பொறுப்புகளுக்கு பெயர் பெற்ற இந்தத் துறைகள், சீரான ரயில் செயல்பாடுகள், பயணிகளின் பாதுகாப்பு, நிதி மற்றும் சுகாதார சேவைகளை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று அதிகாரப்பூர்வ வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே போக்குவரத்து சேவை 1991 பேட்ச் அதிகாரியான முதன்மை தலைமை ஆபரேஷன் மேனேஜர் கே. பத்மஜா ரயில் கால அட்டவணை, நேரம் தவறாமை மற்றும் சரக்கு போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்பார்வையிடுகிறார்.  ஐஆர்டிஎஸ் 1998 பேட்ச் அதிகாரியான முதன்மை தலைமை கமர்ஷியல் மேனேஜர் இட்டி பாண்டே  பயணிகள் சேவைகள், சரக்கு வருவாய் மற்றும் வணிக மேம்பாட்டைக் கையாளும் துறையை நிர்வகிக்கிறார்.

இந்திய ரயில்வே பாதுகாப்புப் படை சேவை 1993 பேட்ச் அதிகாரியான ஐஜி-கம்- முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் அரோமா சிங் தாக்கூர், ஆபரேஷன் யாத்ரி சுரக்ஷா மற்றும் மேரி சஹேலி போன்ற பல பாதுகாப்பு முயற்சிகளுடன் ரயில்வே பாதுகாப்புப் படையை வழிநடத்துகிறார்.

இதேபோல், இந்திய ரயில்வே சுகாதாரப் சேவை 1989 பேட்ச் அதிகாரியான முதன்மை தலைமை மருத்துவ இயக்குநர் டாக்டர் நிர்மலா நரசிம்மன் எட்டு பெரிய மருத்துவமனைகள் மற்றும் மண்டலத்தில் உள்ள 40 சுகாதாரப் பிரிவுகளில் சுகாதாரப் பராமரிப்புக்குப் பொறுப்பேற்றுள்ளார்

இந்திய ரயில்வே அக்கவுன்ட் சர்வீஸ் 1993 பேட்ச் அதிகாரியான முதன்மை நிதி ஆலோசகர் டி. ஹேமா சுனீதா, நிதி மேலாண்மை மற்றும் வருவாய் வளர்ச்சிக்கு தலைமை தாங்குகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top