மகத்தான பொதுவுடமைத் தலைவர். அவரின் கொள்கைகள் மற்றும் மேன்மையை இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது கடந்த தலைமுறையின் கடமை.
தனது நண்பன் காமராஜரிடம் எந்த உதவியும் எதிர்பார்க்காமல், அவரையும் கொள்கை அளவில் எதிர்த்த சமூக சொற்பொழிவாளர். அவரோடு கம்யூனிஸம் மறைந்து விட்டது.
கம்யூனிச பெருமை இப்போது சமரசம் செய்துக் கொண்டு கொள்கையை கூறுபோட்டு கொண்டிருக்கிறது. ஜீவா தமிழக பொதுஅரசியலின் உன்னதம்.
சுயநலமில்லாத பொது நல தியாகிகள் வாழ்ந்த புண்ணிய தமிழகம், சுயநலவாதிகளின் கூடாரமாகி கொண்டிருக்கிறது. ஜீவாவின் சிந்தனைகள் இளைஞர்கள் மனதில் விதைக்கபடவில்லை, மறைக்கப்பட்டது.
பாரதிக்கு, தாசனாக தன்னை சமர்ப்பணம் செய்த பாரதிதாசனும், பெரியார் தன் திருமணத்தின் போது, முடிவெடுப்பதில் குழப்ப நிலையில் இருந்தபோது ஆலோசனை வழங்கிய ராஜாஜியும், மிக நெருக்கமான உறவு இல்லையென்றாலும் அம்பேத்காரை, மிக மரியாதையுடன் நடத்திய காந்தியும், தான் இறக்கும் தருவாயிலும் காமராஜரை நினைவு கூர்ந்த ஜீவானந்தமும்.., மேன் மக்கள் மேன் மக்களே என்பதை நமக்கு உணர்த்தியவர்கள்.
அவர்கள் கொண்ட கருத்தியல்களின் பொருட்டே ஒருவர் மீது மற்றொருவர் பகைமை பாராட்டினர், இருப்பினும் அவர்களுடைய நட்பும் பரஸ்பர மரியாதையும் தனிப்பட்ட சித்தாந்தங்களிலிருந்து வேறுபட்டவை.
தற்போது இதுபோன்ற ஒரு வேறுபட்ட சித்தாந்தங்கள் கொண்ட தனித்தன்மை கொண்ட ஆளுமைகளை ஒரு ஒப்புமைக்காக தேடுகையில் ஒருவரும் இல்லை என்பதே நடைமுறை.
ஜீவா தன் வாழ்நாள் முழுவதையும் தமிழ் சமூகத்திற்காகவும், தமிழக நலனுக்காகவும், தொழிலாளி வர்க்கத்திற்காகவும், தேச சுதந்திரத்திற்காகவும் அர்பணித்தவர்.
தமிழகத்தில் அப்போதைய தேவையான விடுதலை, சுயமரியாதை, சமதர்மம் ஆகியவற்றிற்கு தன் இறுதி மூச்சி வரை போராடியவர் தோழர் ப. ஜீவானந்தம்.
இங்கிலாந்திலிருந்து
சங்கர் 🎋




