Close
மார்ச் 7, 2026 4:40 மணி

அண்ணாமலையார் கோவிலில் நடிகர் விக்ரம் பிரபு சாமி தரிசனம்

அண்ணாமலையார் கோயில் பிரசாதம் வழங்கிய சிவாச்சாரியார்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கும், கிரிவலப் பாதையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் மற்றும் ரமண மகரிஷி ஆசிரமங்களுக்கு  சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .

வெளிநாடு, வெளி மாநில பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது அதேபோல், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்களும் அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கும்கி, இவன் வேற மாதிரி, வாகா, சிகரம் தொடு, வெள்ளக்கார துரை, வீரசிவாஜி, இது என்னமாயம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான பிரபல நடிகர் விக்ரம் பிரபு தனது தாய் மற்றும் மனைவியுடன் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

முதலில் சம்மந்த விநாயகரை வழிபட்டு பின்னர் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனை வழிபட்டார். அதனை தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் சிவாச்சாரியார்கள் மாலை அணிவித்து பிரசாதங்களை வழங்கினர். தொடர்ந்து கோவில் ஊழியர்கள் மற்றும் கோவிலுக்கு சாமி தரிசனம் மேற்கொள்ள வந்த பக்தர்கள் விக்ரம் பிரபுவுடன் குழு புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

இந்நிகழ்வில் ஆகாஷ் அர்பனா ஹோட்டல்ஸ் உரிமையாளர் முத்துகிருஷ்ணன், இளவரசு பட்டம் சங்கர் சிவாச்சாரியார், பாஜக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் கிஷோர் குமார்  உடன் இருந்தனர்.

அண்ணாமலையார் கோவிலில் தனது தாய் மற்றும் மனைவியுடன் சாமி தரிசனம் செய்த விக்ரம் பிரபு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top