Close
மார்ச் 7, 2026 4:23 மணி

மாநில அளவிலான ரோல் பால் போட்டி: குறிஞ்சி பள்ளி மாணவர் 3ஆம் இடம்

மாநில அளவிலான ரோல் பால் போட்டியில் 3ம் இடம் பெற்ற, நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர் லித்திக் ஆரியனை, பள்ளி தாளாளர் தங்கவேல் பாராட்டினார்.

மாநில அளவிலான ரோல் பால் போட்டியில், நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி மாணவர் 3ம் இடம் பெற்று சாதனை படைத்தார்.

ரோல் பால் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில், மாநில அளவிலான 3-வது மினி ரோல் பால் சேம்பியன்ஷிப் போட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 3 நாட்கள் நடைபெற்றது.

நாமக்கல் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 4-ஆம் வகுப்பு மாணவன் லித்திக் ஆரியன், 9 வயதிற்குட்பட்டோர் பிரிவில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி, மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றார்.

நாமக்கல், காளப்பநாயக்கன்பட்டியில் ஸ்ரீ கோகுலம் குருப்ஸ் சார்பில் நடைபெற்ற ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வெள்ளி விழா நிகழ்ச்சியில், குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 5-ஆம் வகுப்பு மாணவி தனிஷா, பரதநாட்டியத்தில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றார்.

போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளை பள்ளி தாளாளர் தங்கவேல், இயக்குனர்கள், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top