Close
மார்ச் 7, 2026 4:40 மணி

நாமக்கல்லில் 29ம் தேதி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 29ம் தேதி நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 29ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமை வகித்து, விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிய உள்ளார்.

மேலும், இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு, வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத்திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top