பாப்பம்பாளையம் அரசுப்பள்ளிக்கு கூடுதல் இடம் ஒதுக்கீடு செய்யக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பள்ளிபாளையம் அருகே பாப்பம்பாளையம் கிராம மக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
பாப்பம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 500 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளிக்கு போதிய இடவசதி இல்லாததால் கூடுதல் வகுப்பறை மற்றும் ஆய்வகங்கள் கட்ட போதிய இட வசதியில்லை.
பள்ளிக்கு அருகே தனியார் காகித ஆலை நிறுவனத்தினருக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் அரை ஏக்கர் நிலத்தை பள்ளிக்கு வழங்கினால் உதவியாக இருக்கும். அதனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.




