Close
ஏப்ரல் 23, 2026 11:37 மணி

முதலைப்பட்டி மாரியம்மன் கோயிலில் நள்ளிரவில் செடல் திருவிழா: பரவசத்துடன் பக்தர்கள் பங்கேற்பு

முதலைப்பட்டி மாரியம்மன் கோயிலில் நள்ளிரவில் நடைபெற்ற, செடல் திருவிழவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

முதலைப்பட்டி செடல் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற, செடல் திருவிழாவில், நள்ளிரவு நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப்பரவசத்துடன் கலந்துகொண்டனர்.

நாமக்கல், சேலம் மெயின் ரோட்டில் உள்ள முதலைப்பட்டியில் பிரசித்திபெற்ற செடல் மாரியம்மன் கோயில் திருவிழா, கடந்த 19ஆம் தேதி காப்புக்கட்டு விழாவுடன் துவங்கியது.

தொடர்ந்து, தினசரி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. ஆக 25ம் தேதி மாவிளக்கு பூஜை நடைபெற்றது. 27ம் தேதி அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி முதலைப்பட்டி, முதலைப்பட்டிப் புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு திருவீதி உலா நடைபெற்றது.

நேற்று அதிகாலை செடல் எனும் அலகு குத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதில், 200 அடி உயர செடல் மரத்தில், விரதம் மேற்கொண்ட பட்டக்காரர்கள் பலகிருஷ்ணன், விஸ்வநாதன், சாமிநாதன் ஆகியோர் முதுகில் ஒருவருக்கு பின் ஒருவராக அலகு குத்தி மூன்று முறை சுற்றி வந்தனர்.

1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் நள்ளிரவில் காத்திருந்து செடல் குத்தும் நிகழ்ச்சியை கண்டு பரவசப்பட்டனர். இன்று (ஆக.28) கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நாளை (ஆக. 29) மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top