Close
மார்ச் 7, 2026 3:09 மணி

நாமக்கல் நகரில் அடையாளம் தெரியாத வாலிபர் வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை

நாமக்கல் நகரில் அடையாளம் தெரியாத வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இடத்தை மாவட்ட போலீஸ் எஸ்.பி. விமலா பார்வையிட்டார்.

நாமக்கல் நகரில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல், மோகனூர் ரோட்டில், முல்லைநகரில் உள்ள மாநகராட்சி நூலகம் அருகில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் ரோட்டோரம் உள்ள மண் தரையில், வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடப்பதாக, காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையொட்டி, நாமக்கல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது கழுத்து, கன்னம், கைகளில் கத்தியால் வெட்டப்பட்டு இறந்து கிடந்த, 25 வயது மதிக்கத்தக்க இளைஞரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருதுவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

மேலும் அந்த இளைஞரின் அருகே கிடந்த செல்போன், வாட்ச் மற்றும் அவரது காலணியையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் விமலா, ஏ.எஸ்.பி ஆகாஷ்ஜோஷி ஆகியோரும் கொலை நடந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது, தடவியல் நிபுணர்களும் வந்து முக்கிய தடயங்களை சேகரித்தனர்.

கொலை சம்பவம் 28ம் தேதி நள்ளிரவில் நடந்துள்ளது. இறந்த இளைஞரின் பெயர், அவர் எந்த ஊரை சார்ந்தவர், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்

மேலும் இறந்த இளைஞரின் செல்போன் உடைக்கப்பட்டுள்ளதால் இளைஞரின் விபரங்கள் குறித்து தகவல் சேகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, இருப்பினும் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top