பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியில் இருந்து, நாமக்கல் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட, வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் (இவிஎம்) பொருத்துக்கூடிய, விவிபேட் இயந்திரங்களை, அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
நாம் யாருக்கு ஓட்டளித்தோம் என்பதை காட்டும் 200 எண்ணிக்கையிலான, விவிபேட் இயந்திரங்கள் பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியில் இருந்து, பாதுகாப்புடன் லாரியில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த இயந்திரத்தில் வாக்காளர்கள் யாருக்கு ஓட்டுப்போட்டனர் என்பதை 6 வினாடிகள் சரிபார்த்துக்கொள்ளலாம். எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் (இவிஎம்) பொருத்தக்கூடிய விவிபேட் இயந்திரங்களை, அங்கீகரிக்கப்பட்ட அரசியில் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அந்த இயந்திரங்கள் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.




