நாமக்கல் மாவட்டத்தில், 9 ஆசிரியர்கள், மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், நாமக்கல் மாவட்டத்தில், 9 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.
அவர்களுக்கு, சென்னையில் நாளை (செப்.5) நடக்கும் விழாவில், தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர், தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு விருது வழங்குகின்றனர்.
நல்லாசிரியர் விருதுக்கு தேர்வ செய்யப்பட்டுள்ளவர்கள் விபரம்:
- ராணி, தலைமையாசிரியர், பாரதி மேல்நிலைப்பள்ளி, ரெட்டிப்பட்டி.
- பிரியங்கா, முதுகலை ஆசிரியர், நிதி உதவி மகளிர் மேல்நிலைப்பள்ளி, ப.வேலூர்,
- அத்தியப்பன், பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆர்.பட்டணம். .
- கேசவன், ஓவிய ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வெண்ணந்தூர்.
- மணிகண்டன், பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பூசாரிபாளையம், ராசிபுரம்.
- கவுசல்யாமணி, தலைமையாசிரியர், நகராட்சி நடுநிலைப்பள்ளி, மேற்கு காலனி, பள்ளிபாளையம்.
- விஜய், இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வால்ராசாம்பாளையம், திருச்செங்கோடு.
- நசிமா, பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பிள்ளைக்களத்தூர், பரமத்தி.
- ஸ்டாலின் பாக்கியநாதன், முதல்வர், மகேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குமாரமங்கலம், திருச்செங்கோடு.




