போட்டித்தேர்வுகளில் வெற்றிபெறுவது குறித்து கல்லூரி மாணவர்களுக்கான வழிகாட்டி கருத்தரங்கம் நாமக்கல்லில் நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் உதவியுடன், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், சிஎஸ்ஐஆர்-நெட், கேட், ஜேஇஎஸ்டி, ஜேஏஎம். சியுஇடி தேர்வுகளில் வெற்றி பெறுவது குறித்து 2 நாட்கள் வழிகாட்டி கருத்தங்கம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் (பொ) ராஜேஸ்வரி தலைமை வகித்தார். கல்லூரி இயற்பியல் துறை துணை தலைவர் சேதுபதி வரவேற்றார். விலங்கியல் துறை தலைவர் ராஜசேகர பாண்டியன், இயற்பியில் துறைத் கவுரவ பேராசிரியர் விக்ரம் பிரசாத் ஆகியோர் பயிற்சின் நோக்கம் குறித்து பேசினார்கள்.
கருத்தரங்கின் முதல் நாளில், ஐஐடி-ஜேஏஎம், சிஎஸ்ஐஆர்-நெட், கேட், ஜேஇஎஸ்டி மற்றும் சியுஇடி நுழைவுத் தேர்வுகள் குறித்தும், யுஜி மற்றும் பிஜி மாணவர்களுக்கான இயற்பியல் அறிவியலில் உள்ள வாய்ப்புகள் மற்றும் நுழைவுத் தேர்வுகள் முழுமையாக ஒரு பார்வை என்ற தலைப்பில் இயற்பியில் துறை கவுரவ விரிவுரையாளர் ஹரிஹரன் பேசினார். போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்தல் குறித்து, ஏஜே கெம் இணை இயக்குனர் ஜீவா விளக்கி கூறினார்.
கருத்தரங்கின் 3ஆம் நாள் நிகழ்ச்சியில் போட்டித் தேர்வில், பகுதி மூன்றில் உள்ள சிக்கலான வினாக்களுக்கு எளிதாக எவ்வாறு தீர்வு காணலாம் என்பது குறித்தும் மற்றும் முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களை பற்றியும் உதவி பேராசிரியர் வேலுசாமி பேசினார்.
தேர்வுக்கான தயாரிப்பு மற்றும் அணுகுமுறை குறித்து, கோவை அரசு தொழில் நுட்ப கல்லூரி உதவி பேராசிரியர் அபுதாஹீர் பேசினார்.
முடிவில் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் கோபி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியர்கள் கோபி, ஹரிஹரன், சண்முகம், வித்யா, கலைவாணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
இந்த கருத்தரங்கில் நாமக்கல், சேலம், திருச்சி, கோவை மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் இருந்து 120க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.




