Close
ஏப்ரல் 24, 2026 2:31 காலை

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், திரளான ஆசிரியைகள் முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன்னின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின், பிறந்தநாளான செப். 5ஆம் தேதி, இந்தியா முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாப்படுகிறது. நாளை 5ம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால், நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் சுமதி தலைமை வகித்தார். பள்ளி ஆசிரியர்கள் சீருடை அணிந்துத வந்து, டாக்டர் ராதாகிருஷ்ணனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

முன்னதாக அனைத்து மாகணவிகளும் ஒன்றுகூடி ஆசிரியர்களுக்கு மலர் கொத்து வழங்கி வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் திரளான ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top