Close
மார்ச் 7, 2026 2:52 மணி

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாகவும், அக்னி ஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்த மாநில கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம்  செய்து வருகின்றனர்.

சந்திரனை தலையில் சூடிய சிவ பெருமானையும், குல தெய்வத்தையும் வழிபடுவதற்கு மிகவும் ஏற்ற நாளும் பௌர்ணமி தான். சிவனே மலையாக வீற்றிருப்பதாக பக்தர்களால் போற்றப்படும் திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதால் சந்திரனின் கதிர்கள், மலை மீது பட்டு, கிரிவலம் வரும் பக்தர்களின் மீது எதிரொலிக்கும் போது அவர்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும் என சொல்லப்படுகிறது.

கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இந்தநிலையில் ஆவணி மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பௌர்ணமி வருகிற செப்டம்பர் 7ம் தேதி நள்ளிரவு 1.41 மணி முதல் தொடங்கி செப்டம்பர் 7ம் தேதி இரவு 11.38 மணி வரை கிரிவலம் செல்வது சிறந்தது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

சதயம் நட்சத்திரத்தின் அதிபதி

இந்த ஆவணி மாத பெளர்ணமி நன்னாளில் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிரிவலம் செல்வதால் கூடுதல் நன்மை உண்டாகும். ஏனென்றால், இந்த பெளர்ணமி திதியும், சதய நட்சத்திரமும் சேர்ந்து வருகிறது. சதயம் என்றால் மிருத்யுஞ்ஜேஸ்வரர் என்று பொருள் ஆகும். மிருத்யுஞ்ஜய என்றால் அது சிவபெருமானின் ஒரு அவதாரம் ஆகும். மிருத்யுஞ்ஜய என்பதற்கு மரணத்தை வென்றவர் என்பது பொருள் ஆகும்.

இந்த நன்னாளில் சதய நட்சத்திரத்தினர் சிவபெருமானை வணங்கி கிரிவலம் சென்றால் நன்மை அடைவார்கள். இந்த நாளில் மகாமிருத்யுஞ்ஜய மந்திரத்தை உச்சரிப்பதால் யம பயம், தீராத நோய்கள் தீரும்.

சூரிய பகவானுக்குரிய ஞாயிற்றுக்கிழமையில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதால் பதவி உயர்வு, அரசியல் மற்றும் அரசு சார்ந்த விஷயங்களில் உயர்வு, அனுகூலம் ஏற்படும். மரண பயம் நீங்கும். நோய்கள் விலகும். சிவலோக பதவி கிடைக்கும். சூரிய பகவானின் அருள் கிடைக்கும்.

செப்டம்பர் 08ம் தேதி திங்கட்கிழமையும் கிரிவலம் செல்லலாம் என்பதால் பாவங்கள் குறைந்து புண்ணியங்கள் சேரும். இந்திரலோக பதவி கிடைக்கும். செல்வ வளம் கிடைக்கும். இந்த நாளில் பஞ்சாட்சர மந்திரம் சொல்வது மிக மிக சிறப்பானதாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top