நாமக்கல் – டிரினிடி மகளிர் கல்லூரியில் ஓணம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நாமக்கல் – டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் டிரினிடி மகளிர் மன்றம் சார்பில், கேரள மாநிலத்தின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் திருவிழா நடைபெற்றது.
கல்லூரியின் செயல் இயக்குநர் அருணா செல்வராஜ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார். ஓணம் பண்டிகையை முன்னிட்டு, மாணவியர் மற்றும் பேராசிரியைகள் கேரள பாரம்பரிய வெண்பட்டு சேலையில் கலந்துகொண்டனர்.
கல்லூரி வளாகத்தில் கண்கவர் அத்தப்பூ கோலம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மாணவிகள் ஓணம் திருவிழா நடனமாடி அனைவரையும் வரவேற்றனர். நிகழ்ச்சியில் மாணவர் பேரவைத் தலைவர் பிரதிக்ஷா, துணைத்தலைவர் சாலினி, செயலாளர் ஹெவியா, இணைச் செயலாளர் கவிப்பிரியா, நுண்கலை செயலர்ளர் மதுசூதனா, நுண்கலை இணைச் செயலாளர் நிவேதா ஆகியோர் ஓணம் திருவிழாவில் சிறப்புகள் குறித்து பேசினார்கள்.
கல்லூரி நிர்வாக அலுவலர் செந்தில்குமார், துறைத் தலைவர்கள் நவமணி, இளமதி, அனுராதா, கண்ணகி, சசிகலா, லேனா, லட்சுமி, இந்திரகுமாரி, பவித்ரா, ரேணுகாதேவி, உடற்கல்வி இயக்குநர் அர்ச்சனா, நூலகர் செல்வி உட்பட திரளான பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.




