ஆவணி மாத பௌர்ணமியொட்டி பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கிரிவலம் மேற்கொண்டு அண்ணாமலையாரை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை மாதந்தோறும் பெளா்ணமி நாள்களில் பக்தா்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.
இந்த ஆண்டு ஆவணி மாத பௌா்ணமி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 01:46 மணிக்குத் தொடங்கி திங்கட்கிழமை நள்ளிரவு 1:30 மணி வரை கிரிவலம் வர உகந்த நேரமாக கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது..
ஆனால், சனிக்கிழமை மாலை முதலே பக்தா்கள் கிரிவலம் வரத்தொடங்கினா். ஞாயிற்றுக்கிழமை காலை 5:00 மணிக்குப் பிறகு கிரிவலம் வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. மாலை 4 மணிக்குப் பிறகு லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.
ரூ. 50 கட்டண தரிசனத்தில் செல்லும் பக்தா்கள், பெரிய தெருவில் இருந்து வரக்கூடிய பக்தா்கள் பூத நாராயணன் கோயில் வழியாகச் சென்று ராஜகோபுரம் நுழைவாயில் சென்று தரிசனம் செய்தனா். சந்திர கிரகணத்தின்போதும், அண்ணாமலையார் கோயிலில் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.
அண்ணாமலையார் கோயில் சந்திர கிரகணத்தின் போது சிறப்பு பூஜைகள் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடா்ந்து, திங்கட்கிழமை காலை வரை பக்தா்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனை வழிபட்டனா். மேலும், கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சந்நிதிகளிலும் ஏராளமான பக்தா்கள் காத்திருந்து வழிபட்டனா்.
திருவண்ணாமலை நகரைச் சுற்றியுள்ள 9 சாலைகளில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இங்கிருந்து சிறப்புப் பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
பக்தா்களின் பாதுகாப்புப் பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுதாகா் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா்.
மழையில் கிரிவலம் வந்த பக்தர்கள்
திருவண்ணாமலையில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் சுமார் இரண்டு மணி நேரம் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழை பெய்தாலும், அதைப்பற்றிக் கவலைப்படாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் குடைகள் மற்றும் மழைக்கோட்டுகள் அணிந்து கிரிவலம் வந்தனா்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு மேல் சந்திர கிரகணம் இருந்ததால் அந்த நேரத்தில் கிரிவலம் வரும் பக்தர்களின் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. பிறகு 1 மணிக்கு மேல் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.





