திருச்செங்கோடு அருகே முனியப்பம்பாளையத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் எரிவாயு தகன மேடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது குறித்து மொளசி ஊராட்சி, முனியப்பம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள், நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா, மொளசி ஊராட்சிக்கு உட்பட்ட முனியப்பம்பாளைம் காவிரி கரையோரப் பகுதியில் உள்ள, அரசு மயான புறம்போக்கு நிலத்தில் ரூ 4 கோடி மதிப்பில் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.
அந்த இடத்தை சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளன. மேலும் அந்த பகுதியில் உள்ள மண் போதிய தரம் இல்லை. மேலும் மயானத்திற்கு செல்லும் சாலை சிறியதாக உள்ளது.
இங்கு அமைக்கும் மின்மயானத்தில் இருந்து வெளியேறும் புகையால் சுவாச கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குடியிருப்பு பகுதியில் எரிவாயு தகனமேடை அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.




