உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் ஆரோக்கியம் நிறைந்த முதுமை என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்திய பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில், உலக பிசியோதெரபி தின விழாவையொட்டி ஆரோக்கியம் நிறைந்த முதுமை என்ற தலைப்பிலான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிசிதெரபிஸ்ட் கவியரசு தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் கலாநிதி பங்கேற்று விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பல்வேறு கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி, மோகனூர் ரோடு, டாக்டர் சங்கரன் ரோடு, ஸ்டேட் பேங்க், திருச்சி ரோடு, மணிக்கூண்டு வழியாக மீண்டும் பழைய அரசு மருத்துவமனையை வந்ததடைந்தது.
பேரணியில் பிசியோதெரபிஸ்ட் சங்க நிர்வாகிகள் நந்தகுமார், ராஜகோபால், புவியரசு, பிரதீப்ஸ்டாலின், சரத்குமார் மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.




