தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில், நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர்.
சென்னை சுவாமி விவேகானந்தா அறக்கட்டளை சார்பில், இரண்டாவது தேசிய அளவிலான சிலம்பம் போட்டி சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிலம்பம் போட்டியில் கலந்துகொண்டனர்.
14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் நாமக்கல் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் அபிநீத் கலந்துகொண்டு முதலிடம் பெற்றார். 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் ரித்தீஸ் கண்ணன், ரித்திஷ் அஸ்வின் ஆகியோர் கலந்துகொண்டு முதலிடம் பெற்றனர்.
தேசிய அளவில் சிலம்பம் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த இவர்கள், 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் சத்தீஷ்கர் மாநிலத்தில் நடைபெற உள்ள, சர்வதேச சிலம்பம் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர்.
சிலம்பம் போட்டியில் தேசிய அளவில் சாதனை படைத்த மாணவர்களை, குறிஞ்சி பள்ளி தாளாளர் தங்கவேல், இயக்குனர்கள், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.




