Close
மார்ச் 7, 2026 6:04 மணி

திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி ஆதீனம் தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் குருபூஜை

திருவண்ணாமலைக்கு தற்பொழுது யாரெல்லாம் வந்து இன்னொரு அடையாளத்தை காட்டுகிறார்களோ அவர்கள் வரலாற்றில் தானாகவே காணாமல்போய்விடுவார்கள் என்று திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி ஆதீனம் தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் 700-ஆம் ஆண்டு விழாவில் மகா குருபூஜை  தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசினார்.

திருவண்ணாமலை ஆதீனம் என்பது குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனம் ஆகும். இது தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான சைவ சித்தாந்த மடம் ஆகும். இந்த மடம், சைவ சித்தாந்தத்தை பரப்புவதிலும், பக்தியை வளர்ப்பதிலும் முக்கிய பங்காற்றி வருகிறது.

ஆதீனம் மகா குருபூஜை

திருவண்ணாமலை ஆதீனம் மகா குருபூஜை என்பது குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்தின் தெய்வசிகாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகளின் குருபூஜை விழாவைக் குறிக்கிறது. இந்த விழா திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திங்கட்கிழமை குன்றக்குடி ஆதீனம் தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் 700-ஆம் ஆண்டு மகா குருபூஜை விழா நடைபெற்றது.

விழாவையொட்டி காலை 10 மணி அளவில் திருவண்ணாமலை வேட்டவலம் ரோடில் உள்ள  குன்றக்குடி ஆதீனம் மடத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில்  தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியாரின் திருவுருவப்படத்திற்கு பல்வேறு வகையான மலர் மாலைகள் தொடுத்து அலங்கரித்து  வைக்கப்பட்டிருந்த திருஉருவப் படத்திற்கு தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சிறப்பு பூஜைகள் செய்தார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தின் தலைவர் மற்றும் திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனத்தின் நிர்வாக அதிகாரியுமான  லாயர் சந்திரமோகன் தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்று பேசினார்.

தொடர்ந்து குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கி பேசுகையில்,

திருவண்ணாமலையின் ஒரு பெரிய அடையாளமாக வாழ்ந்தவர் தெய்வசிகாமணி தேசிகபரமாச்சாரியார் என்றும் அவர் பல்வேறு நிகழ்வுகளை திருவண்ணாமலையில் நிகழ்த்தி உள்ளதை கூறிய அவர் திருவண்ணாமலைக்கு தற்பொழுது யாரெல்லாம் வந்து இன்னொரு அடையாளத்தை காட்டுகிறார்களோ அவர்கள் வரலாற்றில் தானாகவே காணாமல்போய்விடுவார்கள்.

குறிப்பாக இதே திருவண்ணாமலையில் தோன்றி தங்களை உலகத்தின் அடையாளமாக காட்டிக்கொண்டவர்கள் கூட கால வெள்ளத்தில் அடித்துச் செல்வார்கள். அசலும் போலியும் பார்ப்பதற்கு ஒன்றாய் தெரியும் ஆனால் அசல் அமைதியாக இருக்கும், போலி காற்றில் மறைந்து கற்பூரமாய் காணாமல் போய்விடும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் விரைவில் இத்திருக்கோவிலுக்கு குடமுழுக்கு பெருவிழா நடைபெறும் என்றும் அதற்கு உண்டான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று கூறினார்.

பல்வேறு வகையான நாட்டு மரக்கன்றுகள்

தொடர்ந்து நிகழ்ச்சியில் 45 வது குரு மகா சன்னிதானத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகளை தவத்திற் குன்றக்குடி அடிகளார் வழங்கினார்.
தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் ஆசிர்வாதமும் வழங்கினார். நிகழ்ச்சியில் கவிஞர் முருகையன், அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் முன்னாள் கண்காணிப்பாளர் துவாரக நாத், மற்றும் சரவணக்குமார், சதீஷ்குமார், ரியல் எஸ்டேட் அதிபர் ஆறுமுகம், செல்வ சூர்யா, ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top