Close
மார்ச் 7, 2026 6:04 மணி

நாமக்கல் மாவட்டத்தில் 13ம் தேதி ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம்

நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாக்களில் 13ம் தேதி ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல், செல்போன் எண் பதிவு மற்றும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை மேற்கொள்ளவும், பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், ரேஷன் கார்டில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம், 13ம் தேதி சனிக்கிழமை காலை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெற உள்ளது.

நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்திவேலூர் மற்றும் குமாரபாளையம் தாலுகா அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் இந்த முகாம் நடைபெற உள்ளது.

பொதுமக்கள் முகாம்களில் கலந்து கொண்டு ரேஷன் கார்டு தொடர்பான தங்கள் குறைகளை தீர்வு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top