Close
மார்ச் 7, 2026 4:26 மணி

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் பட்டமளிப்பு விழா

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழவில், மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழவிற்கு, கல்லூரி முதல்வர் (பொ) ராஜசேகர பாண்டியன் தலைமை வகித்தார். கல்லூரி தாவரவியல் துறை தலைவர் ராஜேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பட்டச்சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:

மாணவ மாணவிகள் வாழ்க்கை பாதையில் முயற்சி என்ற சிறு நடையைப் போட்டு, வெற்றிப்பாதையாக மாற்ற வேண்டும். வாழ்க்கையில் பொறுமை, விடாமுயற்சி, ஈடுபாடு ஆகியவற்றுடன் முயற்சிக்கும் தருணத்தில், நீங்கள் விரும்பியதை அடையலாம். சவால்கள் வாழ்க்கையை அழகாக்குகின்றன. சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகின்றன. சோதனைகளை சாதனையாக்குங்கள் என அவர் பேசினார்.

தொடர்ந்து, இளநிலையில் 254 பேர், முதுநிலையில் 105 பேர் என, மொத்தம் 359 மாணவ, மாணவிகளுக்கு பட்டச்சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top