எருமப்பட்டி வட்டாரத்தில், மா சாகுபடியில் நவீன தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி வட்டாரத்தில் உள்ளள, போடிநாயக்கன்பட்டி, கெஜக்கோம்பை, புதுக்கோம்பை போன்ற கிராமங்களில், சுமார் 322.40 ஹெக்டர் பரப்பில் மா பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதை அடுத்து மா சாகுபடியை மேம்படுத்த, நவீன சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் நோய், பூச்சி, ஊட்டச்சத்து மேலாண்மை குறித்த அறிவியல் தகவல்கள் மற்றும் மா பயிரில் கவாத்து முறைகள் மேற்கொள்வதற்கான பயிற்சி முகாம் புதுக்கோம்பை கிராமத்தில் நடைபெற்றது.
பூச்சி மற்றும் நோய்கள் துறை உதவி பேராசிரியர் தாரணி பிரியா மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு மா சாகுபடியில் நவீன தொழில் நுட்பம் குறித்து பயிற்சி அளித்தனர்.
பயிற்சியில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தோட்டக்கலை உதவி இயக்குநர் பால் ஜாஸ்மின் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.




