திருவண்ணாமலையில் வரும் 19ஆம் தேதி கல்வி கடன் முகாம் அனைத்து வங்கிகளின் சார்பில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,
திருவண்ணாமலை மாவட்ட நிருவாகமும், மாவட்ட முன்னோடி வங்கியும் (இந்தியன் வங்கி) இணைந்து நடத்தும் கல்வி கடன் முகாம் அனைத்து வங்கிகளின் சார்பில் வரும் 19 ஆம் தேதி காலை 9 மணி அளவில் அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
மேற்கண்ட முகாமில் ஏற்கனவே பெறப்பட்ட கல்விக்கடன் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் ஆணை வழங்கப்படுகிறது, மேலும் முகாமில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் புதிதாக கல்விக்கடன் பெற விண்ணப்பங்கள் இணையத்தில் பதிவேற்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது,
கல்வி கடனுக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் ஆதார், பான், கார்டு மற்றும் கல்வி தொடர்பான ஆவணங்களுடன் கலந்து கொண்டு தங்கள் விண்ணப்பங்களை wwwpmvidyalaxmicoin என்ற இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
பான் கார்டு இல்லாத மாணவர்கள் ஆதார் நகல் மற்றும் 2 புகைப்படங்கள் எடுத்து வந்தால் முகாம் நடைபெறும் இடத்திலேயே இசேவைமையம் மூலமாக பான் கார்டுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். புதிய சேமிப்பு கணக்கு தொடங்கும் வசதி கடன் தொடர்பான வங்கி உதவி மைய சேவை வசதிகளும் இந்த முகாமில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் வங்கி விதிமுறைகளுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து உடனடியாக கல்வி கடன் அனுமதி வழங்கப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.




