திருவண்ணாமலை மாநகராட்சி வேங்கிக்காலில் உள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்கள் துறை வாரியாக பதிவு செய்யப்படுவதை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அரசுத்துறைகளின் சேவைகள் திட்டங்களை அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்ட முகாம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டு மாநிலம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நகரப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் தற்போது வரை 210 முகாம்கள் நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாநகராட்சி வேங்கிக்காலில் உள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு பட்டா மாற்றத்திற்கான சான்றிதழ்களும், வாரிசு சான்றிதழ்களும் சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், மின் இணைப்புக்கான ஆணைகள் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டிற்கான அட்டைகள் வழங்கினார்.
மேலும், 70 பன்ளி மாணவர்களுக்கு சாதி சான்றிதழ்களை சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களிடம் வழங்கினார்.
இம்முகாமில் மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, வட்டாட்சியர் மோகனராமன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




