Close
மார்ச் 7, 2026 2:50 மணி

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி

நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு அளித்த, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ராஜேஷ்குமார், எம்.பி., வழங்கினார்.

நாமக்கல்லில் தாலுகா பகுதியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி, நாமக்கல் மாநகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி., நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 415 பயனாளிகளுக்கு, ரூ. 1.48 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 24 நகர்ப்புறம், 15 ஊரகப் பகுதிகளில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெற்று வருகிறது. நகர்ப்புறத்தில் 110 மற்றும் கிராமப்புறங்களில் 118 என மொத்தம்- 228 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, இதுவரை, 196 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இம்முகாம்களில், 86,565 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இதில், முகாம் நடந்த அன்றே, உடனடி நடவடிக்கையாக, 9,400 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 60,252 மனுக்கள் வரப்பெற்றுள்ளது. மேலும், 3-ம் கட்டமாக, கடந்த 15 முதல், வரும் அக். 10 வரை, 60 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நாமக்கல் தாலுகாவில் பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், 425 பேருக்கு, ரூ. 1.48 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்படுகிறது என்றுகூறினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் பூபதி, கமிஷனர் சிவகுமார், ஆர்.டி.ஓ., சாந்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனி சப் கலெக்டர் பிரபாகரன் உள்பட பலர்  கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top