நாமக்கல்லைச் சேர்ந்த 11வயது பள்ளி மாணவர், ஒரு நிமிடத்தில், 118 முறை முழங்காலில் சிலம்பம் சுற்றி சாதனை படைத்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.
நாமக்கல் காமராஜர் நகரை சேர்ந்த ராஜ்குமார், திவ்யா தம்பதியரின் மகன் தேவ சிவபாலன் (11). இவர், 6 வயது முதல், நாமக்கல் ஏகலைவா கலைக்கூடத்தில், சிலம்பம் கற்று வருகிறார். மாணவர் தேவசிவபாலன், பாரம்பரிய கலையான சிலம்ப கலையில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகிறார்.
அவர் அலங்கார சிலம்ப பாடத்தில், முழங்கால் சுற்று பயிற்சியை அவர் மேற்கொண்டார். நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில், சிலம்பம் கம்பை, தனது முழங்கால்களைச் சுற்றி அதிவேகமாக சுழற்றும் முறையில், ஒரு நிமிடத்திற்கு, 118 முறை சுற்றி ஒரு புதிய சாதனை படைத்தார்.
அவரது இந்த சாதனையை, லண்டன் கின்னஸ் உலக சாதனை புத்தகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை கின்னஸ் நிறுவனத்தால், உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு, மாணவருக்கு கடந்த, 28ம் தேதி, லண்டனில் இருந்து சாதனை சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சிலம்பம் பயிற்சியில் கின்னஸ் சாதனை படைத்த நாமக்கல் மாணவன் சிவபாலனை, கிழக்கு மாவட்ட பாஜ தலைவர் சரவணன், மாவட்ட பட்டியல் அணி பொதுச்செலாளர் கந்தசாமி ஆகியோர் பாராட்டினார்கள்.




