Close
மார்ச் 7, 2026 2:51 மணி

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி

கட்டுமானத் தொழிலாளர்களுக்கான இலவச திறன் மேம்பாட்டு பயிற்சியை கலெக்டர் துர்காமூர்த்தி துவக்கி வைத்தார்.

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் சார்பில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் மூலம் கொத்தனார், தச்சுவேலை, வர்ணம் பூசுதல், கம்பி வளைப்பு வேலை, பிளம்பர், மின் பணியாளர், வெல்டர், கருமான் கொல்லர், ஏ.சி. மெக்கானிக், கண்ணாடி அறுத்தல், கிரானைட் ஒட்டுதல் ஆகிய தொழில்களில் பதிவு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு, 7 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி, நாமக்கல் மற்றும் கொல்லிமலை அரசு ஐடிஐ பயிற்சி நிலையங்களில் நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அரசு ஐடிஐ மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கலந்துகொண்டு பயிற்சியினை துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் பதிவு பெற்ற 1800 கட்டுமானத் தொழிலாளர்களுக்கான ஒரு வாரம் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெறும்.

இப்பயிற்சி வாரந்தோறும் திங்கள் முதல் ஞாயிற்றுகிழமை வரை நடைபெறும். பயிற்சியில் கலந்துக்கொள்ளும் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.800 உதவித்தொகை, மதிய உணவு மற்றும் பயிற்சியில் கலந்துக்கொண்டதற்கான பயிற்சி சான்றிதழும் வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சியில், தொழிலாளர் உதவி கமிஷனர் இந்தியா, நாமக்கல் அரசு ஐடிஐ முதல்வர் ஈஸ்வரன், பயிற்சியாளர் சங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top