மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சிக்குட்பட்ட வளையங்குளம் பகுதியில் உள்ள மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணிகள் கடந்த ஆறு மாதமாக நடைபெற்ற வருகிறது.
மத்திய அரசின் நெடுஞ்சாலை போக்குவரத்து துறை சார்பில் ரூபாய் 38 கோடியே 23 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பாலத்திற்கு கீழ் புதிதாக போடப்படும் 20 அடி சாலையை கூடுதலாக மேலும் 20 அடியாக மொத்தம் 40 அடி சாலையாக அகலப்படுத்த கோரி, வளையங்குளம் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை.
ஆகையால், தற்போது பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் இப்பகுதியில் இருந்து பள்ளி கல்லூரிகள் செல்லும் மாணவர்கள் பெரிதும் அவதிக்குள்ளனர்.
வேலைக்கு செல்லும் பொதுமக்கள் தற்போது சாலை மறியல் சிக்கி தவித்து வருகின்றனர் தகவல் அறிந்து வந்த பெருங்குடி காவல் ஆய்வாளர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.




