பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டடத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பை சேர்ந்த 90 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு, சங்க திட்ட தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் வேலுசாமி போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
தொடர்ந்து நடைபெற்ற மறியல் போராட்டத்தில், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவர் என்ற திமுகவின் தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற வேண்டும். மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு நிர்வாகமே நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
90 பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்து பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர்.




