Close
மார்ச் 7, 2026 6:02 மணி

உயர்கோபுர மின் விளக்குகள் திறப்பு விழா: மாதேஸ்வரன், எம்.பி., பங்கேற்பு

நாமக்கல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள, உயர்கோபுர மின் விளக்குகளை மாதேஸ்வரன், எம்.பி., திறந்து வைத்தார்.

நாமக்கல் பகுதியில் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின் விளக்குகளை மாதேஸ்வரன் எம்.பி., திறந்து வைத்தார்.

நாமக்கல் கொமதேக., எம்.பி., மாதேஸ்வரன் தனது நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ. 17.50 லட்சம் மதிப்பில், பொரசபாளையம், மஞ்சநாய்க்கனூர், புள்ளகுமரன்பாளையம், லத்துவாடி அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி லத்துவாடி, வெள்ளாளப்பட்டி (ஆண்டாபுரம்) ஆகிய இடங்களில், உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவில், மாதேஸ்வரன், எம்.பி., கலந்துகொண்டு, மின் விளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ஆர்எஸ்ஆர் மணி, நாமக்கல் மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் சசிகுமார், அவை தலைவர் பழனிமலை, விவசாய அணி மணி, நாமக்கல் சட்டசபை தொகுதி மகளிரணி செயலாளர் பிரேமலதா, நாமக்கல் வடக்கு ஒன்றிய செயலாளர் கந்தசாமி, மத்திய ஒன்றிய செயலாளர் செல்வராசு, சிவகுமார், குப்புசாமி, செல்வராஜ், வனிதா, தமிழ்செல்வி, தினேஷ், சதீஷ், சண்முகம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top