தாயுமானவர் திட்டத்தின் மூலம், வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம், நாமக்கல் மாவட்டத்தில் நாளை தொடங்கி, 2 நாட்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், தமிழக அரசின் தாயுமானவர் திட்டத்தின் மூலம், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று, அத்தியாவசியப் பொருட்கள், ஒவ்வொரு மாதமும், இரண்டாவது சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வினியோகம் செய்யப்படுகிறது.
அதன்படி, இம்மாதத்திற்கு, நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று, அத்தியாவசியப் பொருட்கள் வினியோகம் செய்யப்படும். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




