திருவண்ணாமலை மாவட்டத்தில் இலங்கை தமிழா்களுக்காக ரூ.14.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 252 குடியிருப்புகளை சென்னையில் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பள்ளிப்பட்டு மற்றும் சொரகொளத்தூா் பகுதியில் வசிக்கும் இலங்கை தமிழா்கள் தங்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டித் தருமாறு அரசிடம் கோரிக்கை விடுத்ததன் பேரில், மாவட்ட நிா்வாகத்தால் அரசுக்கு கருத்துருக்கள் அனுப்பப்பட்டன.
இதையடுத்து பொது மற்றும் மறுவாழ்த்துறை சாா்பில் சொரகொளத்தூா் பகுதியில் வசிப்போருக்கு ரூ. 5.30 கோடி மதிப்பில் 92 புதிய குடியிருப்புகள், தென்பள்ளிப்பட்டு பகுதியில் வசிப்போருக்கு ரூ.9.22 கோடி மதிப்பில் 160 புதிய குடியிருப்புகள் என மொத்தம் 252 குடியிருப்புகள் அகரம்சிப்பந்தி பகுதியில் கட்டப்பட்டுள்ளது.
இந்த குடியிருப்புகளுக்கு உரிய தெருவிளக்கு வசதி, கால்வாய் வசதி, சாலை வசதி, புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் அமைத்து குடிநீா் வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
இந்த குடியிருப்புகளை சென்னையில் இருந்தவாறு காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் ஸ்டாலின் திறந்துவைத்தாா்.
இதையடுத்து அகரம்சிப்பந்தி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி குத்துவிளக்கு ஏற்றி கட்டட பயன்பாட்டை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பேசியதாவது: பொது மறுவாழ்வு துறை சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு முகாம்களில் உள்ள 152 பயனாளிகளுக்கும் வீடுகளை காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார், அதை இப்பொழுது நாம் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்துள்ளோம், தமிழ்நாடு முதலமைச்சர் இலங்கை தமிழர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்,
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசபாக்கம் வட்டாரத்தைச் சேர்ந்த தென்பள்ளிப்பட்டு மற்றும் சொரகொளத்தூர் பகுதியில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் அரசிடம் தங்களுக்கு புதிய குடியிருப்புகள் அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்ததன்பேரில், மாவட்ட நிர்வாகத்தால் அரசுக்கு கருத்துருக்கள் அனுப்பப்பட்டு, சொரகொளத்தூர் முகாமிற்கு மாற்றாக ரூ 530.15 கோடி மதிப்பீட்டில் 92 புதிய குடியிருப்புகளும், தென்பள்ளிப்பட்டு முகாமில் வசிப்பவர்களுக்கு ரூ 922 கோடி மதிப்பீட்டில் 160 புதிய குடியிருப்புகள் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், நாயுடுமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அகரம்சிப்பந்தி பகுதியில் மொத்தம் 252 புதிய குடியிருப்புகள் அமைத்து தர, தமிழ்நாடு அரசால் இசைவு அளிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இக்குடியிருப்புகளுக்கு உரிய தெருவிளக்குகள் வசதியும், புதிய மேநீர் தேக்கதொட்டி அமைத்து குடிநீர் வசதியும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இது தவிர, மொத்தம் ரூ 299.45 கோடி மதிப்பீட்டில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மேநீர் தேக்கதொட்டிகளும், ஒரு திறந்தவெளி கிணறு குடிநீர் ஆதாரமாகவும், பக்ககால்வாய் மற்றும் சிமெண்ட் சாலை தெருக்களும் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து குடியிருப்புகளை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ், திருவண்ணாமலை எம்பி அண்ணாதுரை, கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.




