Close
மார்ச் 7, 2026 6:13 மணி

பனை விதைகள் நடும் பணி: தொடங்கிவைத்த அமைச்சா்

பனை விதைகள் நடும் பணி, தொடங்கிவைத்த அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நீா்நிலைகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் பனை விதைகள், மரக்கன்றுகள் நடும் பணியை அரடாப்பட்டு ஊராட்சி ஏரிக்கரையில் பனை விதை நட்டு வைத்து பொதுப் பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தொடங்கிவைத்தாா்.

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு பசுமை இயக்கம் இணைந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 லட்சம் பனை விதைகள் மற்றும் 10 லட்சம் பழம்தரும் மரங்கள் நடும் பணியை மேற்கொள்ள உள்ளன.

அதனடிப்படையில், இந்த மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 5 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 18 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 842 கிராம ஊராட்சிகளில் ஊரக வளா்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீா்நிலைகள், நீா்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீா்நிலைகள், பள்ளி, கல்லூரி வளாகம், நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகள், ஏரிகள், வாய்க்கால் கரையோரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 10 லட்சம் பனை விதைகள் நடும் பணி மற்றும் 10 லட்சம் பழம்தரும் மரங்கள் நடும் பணியை அமைச்சா் எ.வ.வேலு தொடங்கிவைத்தாா்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் செயலாற்றி வருகிறது.

தமிழ்நாடு அரசு மக்களுக்கு தேவையான அனைத்து வகையான திட்டங்களையும் நிறைவேற்றி உள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டின் பாரம்பரிய மரமான பனைமரம் அழியத் தொடங்கியுள்ளது. இதை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மண்ணின் வளத்தை பாதுகாக்கவும் நிலத்தடி நீரை சேமிக்கவும் மாநிலம் முழுவதும் பனை மரக்கன்றுகளை நட வேண்டும், எனவும், இந்த ஆண்டில் 6 கோடி பணம் கன்றுகளைவைக்க வேண்டும் என அரசின் சார்பாக ஆணை பிறப்பித்து அதற்காக நிதியையும் ஒதுக்கினார்.

அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் 842 ஊராட்சிகளை உடைய பெரிய மாவட்டம். இம்மாட்டத்தில் இந்த ஆண்டு 10 லட்சம் பணம் கன்றுகளை நட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டதன் அடிப்படையில் இன்றைக்கு இப்பணியை திருவண்ணாமலை ஒன்றியம் அரடாப்பட்டு ஊராட்சியில் உள்ள ஏரிக்கரை பகுதியில் இத்திட்டத்தை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

10 லட்சம் பனை மரக்கன்றுகளை நடும் வகையில், இதற்கான பணிகள் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அரடாப்பட்டு ஊராட்சியில் உள்ள ஏரிக்கரை பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ், ரிஷிவந்தியம் எம்எல்ஏ காா்த்திகேயன், மாவட்ட வன அலுவலா் சுதாகா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநா் / திட்ட இயக்குநா் டாக்டா் மணி, ஊரக வளா்ச்சி செயற்பொறியாளா் இளங்கோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top