Close
மார்ச் 7, 2026 3:11 மணி

அருணாச்சல எல்லையில் போர் விமானத் தளங்களை அவசரமாகக் கட்டமைக்கும் சீனா: அதிர்ச்சி தரும் செயற்கைக்கோள் படங்கள்!

இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், அருணாச்சல பிரதேச எல்லையில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு விமான தளத்தில் சீனா அவசரகதியில் 36 போர் விமானங்களை நிறுத்தக்கூடிய பாதுகாப்புத் தளங்களை கட்டமைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரத்தியேகமாக வெளியிடப்பட்டுள்ள புதிய செயற்கைக்கோள் படங்களின் மூலம் இந்த ராணுவக் கட்டுமானம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டுமானம், சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சுவானில் அமைந்துள்ளது. இது அருணாச்சலப் பிரதேசத்தின் இந்திய எல்லைக்கு மிக அருகில் உள்ள ஒரு விமானப்படைத் தளம் ஆகும்.

சீனா இங்கு மொத்தம் 36 கான்கிரீட் கூரை கொண்ட பாதுகாப்புத் தளங்களை உருவாக்கியுள்ளது. இந்தத் தளங்கள் அதிநவீன போர் விமானங்களை எதிரிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன.

இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான போர் விமானங்களுக்கான பாதுகாப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருப்பது, எல்லைப் பகுதியில் சீனா தனது ராணுவ இருப்பையும் தயார்நிலையையும் வேகமாக அதிகரிப்பதைக் காட்டுகிறது. தேவைப்பட்டால், குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் சீன விமானப்படை பெரிய எண்ணிக்கையிலான விமானங்களை இங்கு நிறுத்த முடியும்.

கிழக்கு லடாக் எல்லையில் பதற்றம் குறைந்துவிடாத நிலையில், அருணாச்சலப் பிரதேசம் அருகே சீனா மேற்கொண்டுள்ள இந்த ராணுவக் கட்டமைப்பு, இந்திய ராணுவத்திற்கு ஒரு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா, அதன் பங்கிற்கு எல்லையின் உள்கட்டமைப்பு மற்றும் ராணுவத் தயார்நிலையை வேகமாக மேம்படுத்தி வருகிறது. இருப்பினும், சீனாவின் இந்தப் புதிய விமானத் தளங்கள், எதிர்காலத்தில் எல்லைப் பகுதிகளில் பதற்றம் அதிகரிக்கும்பட்சத்தில் சீனாவிற்கு மூலோபாய ரீதியாக ஒரு பெரிய அனுகூலத்தை வழங்கக்கூடும் என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top