திருவண்ணாமலை வழியாக சென்றிருந்த எக்ஸ்பிரஸ் ரயில்களை 3 மாதங்களுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அதை மீண்டும் இயக்க அண்ணாதுரை எம்பி கோரிக்கை வைத்தார்.
இதுகுறித்து ரயில்வே பொது மேலாளருக்கு அண்ணாதுரை எம்பி அனுப்பிய அவசர கடிதத்தில், திருவண்ணாமலை மாவட்டம் மிக பிரசித்தி பெற்ற மாவட்டம், மாவட்டத்தில் அண்ணாமலையார் திருக்கோவில், மல்லிகார்ஜூனேஸ்வரர் சமேத பிரம்மாம்பிகை தாயார் கோவில் உள்ளது
அதேபோல் எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில், 27 நட்சத்திரங்கள் பொருந்திய ஒரே முருகப்பெருமான் கோவில் இங்கு உள்ளது. இது போன்ற எண்ணற்ற பிரசித்தி பெற்ற கோவில்கள் நமது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது.
இதன் காரணமாக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆனாலும் திருவண்ணாமலைக்கு போதுமான ரயில் போக்குவரத்து வசதிகள் இல்லை, அதிலும் இதற்கு முன்பு இருந்த எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 3 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இயங்கப்பட்ட வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்களும் கடந்த 3 மாதங்களாக பராமரிப்பு பணி காரணம் என தெரிவித்து நிறுத்தப்பட்டுள்ளது. எனவே நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயங்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருவண்ணாமலை , திருச்சி, மதுரை வழியாக இயங்கப்பட்ட கச்சிகுடா – நாகர்கோயில் எக்ஸ்பிரஸ், திருவண்ணாமலை சிதம்பரம் திருவாரூர் வழியாக இயங்கப்பட்ட ஐதராபாத் – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மற்றும் சார்னா பள்ளி ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்வே கடந்த 3 மாதங்களாக இயங்கவில்லை.
அதனால் இந்த வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்களை பயன்படுத்தி வந்த ஆன்மீக பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயங்க வேண்டும். ஒரு சில இடங்களில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் அதற்கு தடையாக இருந்தால் திருவண்ணாமலை வரையிலாவது தற்காலிகமாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் கடந்த ஜனவரி வரை திருவண்ணாமலை வழியாக இயங்கப்பட்ட திருநெல்வேலி ஷாலிமார் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலை மீண்டும் திருச்சி திருவண்ணாமலை சென்னை பெரம்பூர் வழியாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதெரிவித்துள்ளார்.




